HISTORY OF THIRUKOVILUR

Tuesday, July 24, 2012

முதலாழ்வார்கள் பாசுரங்கள் - Mudhalazhvaars Pasurams


வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்யகதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியானடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி, நீங்குகவேயேன்று.      - பொய்கையாழ்வார்

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தையிடு திரியா - நன்புருகி
ஞானச்சுடர் விள்க்கேற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்.          - பூதத்தாழ்வார்


திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேண் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பாள் இன்று.  -     பேயாழ்வார்